Pengikut

Ahad, 6 September 2009

JANGAN SALAHKAN BN..


MENTERI KESELAMATAN DALAM NEGERI MENDAKWA ADA AHLI PKR, PAS DAN BN ( TAPI BUKAN AHLI UMNO) TERLIBAT DALAM PERARAKAN KEPALA LEMBU.

tong-tong,

hang sotong!!!

( artikel di bawah bacalah dengan pemahaman sendiri..ok)

மாட்டுத் தலை சம்பவம் உண்மையில் பெரிய நாடகம் போன்று விரிந்து கொண்டிருக்கிறது. அந்த விவகாரம் இது வரை கையாளப்பட்டுள்ள முறை ஒரே மலேசியா பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

முதலாவது அந்த விஷயம் மீது போலீசார் மெதுவாகச் செயல்படுகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை தான் அவர்கள் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு சட்டத் துறைத் தலைவரிடம் அறிக்கை சமர்பித்தனர். அவர் அதனை மேலும் விசாரிக்குமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆகவே நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த இடத்தில் சட்டத் துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரம் இருப்பதாக விகே லிங்கம் வழக்கில் அரச விசாரணைக்குழு தீர்ப்பளித்த போதிலும் இது வரை ஒன்றும் நடக்கவில்லை என்பது நமது நினைவுக்கு வருகிறது.

இரண்டாவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களை அதாவது மாட்டுத் தலையை அந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனை மிதித்து காறி உமிழ்ந்ததின் மூலம் தேச நிந்தனையைப் புரிந்துள்ள அதே மக்களை சந்திக்கிறார்.

அது இந்துக்களாக இருந்து தங்களது வீடமைப்புப் பகுதிக்கு பள்ளிவாசல் ஒன்று இடமாற்றம் செய்யப்படுவதை ஆட்சேபித்தால் ஹிஷாமுடின் அதே மாதிரி செய்திருப்பாரா? விஷயம் அப்படி இருந்திருந்தால் அதிகாரிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறிய அரசியல் வசனங்கள் இரட்டை நாக்கு வசனங்கள் ஆகும். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன உணர்வுகளை துண்டி விடும் நோக்கமோ அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் எண்ணமோ இல்லை என்பதால் அவர்களை குற்றம் சொல்ல முடியாது என்று அவர் கூறினார். தாங்கள் பலியாக்கப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர் என்றும் அவர் சொன்னார். ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கையை சிறியதாக வைத்திருந்ததாக கூறியதின் மூலம் அமைச்சர் அவர்களுடைய சட்ட விரோத (அவர்களிடம் அனுமதி இல்லை) ஆர்ப்பாட்டத்தை தற்காத்தும் பேசியிருக்கிறார்.

நல்லது அமைச்சரே அதை விட சிறிய எண்ணிகையிலான ஆர்ப்பாட்டத்தின் போது கூட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டது போல அந்த கோவிலை இடமாற்றம் செய்வதில் “மோசமான முடிவைச”‘ செய்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் அவர் விடுத்த அறிக்கைக்கு இப்போது தொடக்கம் எப்போதும் அவர் பொறுப்பேற்க வேண்டிய ஒரு வாசகம் ஆகும். ” இன்றைய நாளில், இக்கால கட்டத்தில் மக்கள் தங்களுடைய குரல் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புவதால் இந்த உலகில் ஆர்ப்பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும். தங்களது கருத்துக்களை அவர்கள் தெரிவிப்பதற்கு நாம் வாய்ப்புக் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.”

அந்த வார்த்தைகள் உள்துறை அமைச்சரின் வாயிலிருந்து வந்தவை நண்பர்களே. பொது ஆர்ப்பாட்டங்கள் சரியானவை. ஆகவே போலீஸ்காரர்களே உங்களுடைய கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீரைப் பாய்ச்சும் சாதனங்கள், மற்றும் எல்லாவற்றையும் வீட்டிலேயே வைத்திருங்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது விலங்குத் தலை ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல என்று ஹிஷாமுடின் மேலும் கூறியிருக்கிறார். அம்னோ கொடி சுற்றப்பட்ட பன்றித் தலை ஒன்று அம்னோ தலைமையகத்திற்குள் வீசப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

அது உண்மையில் குறிப்பாக நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பொறுப்பேற்றுள்ள ஒர் அமைச்சரிடமிருந்து வருவது வருத்தமளிக்கிறது. அவர் என்ன தான் சொல்ல வருகிறார்? ஆம் அவர் மாட்டுத் தலை ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்க முயல்கிறார். ஆனால் பன்றித் தலையை கொண்டு வருவதின் மூலம் அவர் இன்னொரு சமூகத்தை குற்றம் சாட்டவும் அவர் தந்திரமாக முயலுகிறார். அது குறும்புத்தனமாக இல்லை? இரண்டு தவறுகள் ஒரு விஷயத்தை சரியாக்கி விடாது என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆகவே பழைய தவற்றை முன்வைத்து மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தை ஏன் நியாயப்படுத்த வேண்டும்?

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அடுத்த நாள் ஹிஷாமுடின் தலைகீழாக மாறி மாட்டுத் தலை ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தது சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதால் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தபட வேண்டும் என்று அறிவித்தார். தாம் முதலில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஒரு போதும் நியாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். அவருக்கு ஏதும் ஞாபக மறதி நோய் உள்ளதா? முதல் நாள் அவர் கூறிய விஷயங்களுக்காக அவருடைய எஜமானர் நஜிப் ரசாக் அவரைக் கண்டித்திருப்பாரோ?

வழக்கம் போல அவர் மற்றவர்கள் மீது பழி சுமத்தினார். தாம் மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தை அங்கீகரிப்பதாக காட்டும் ஒரு தோற்றத்தை வலைப்பதிவாளர்கள் ஏற்படுத்தி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். நாம் எவ்வளவு பெரிய மேதாவியை அமைச்சராக பெற்றுள்ளோம். தமது குரு டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து அவர் அதனைக் கற்றுக் கொண்டாரா?

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையிலும் ஆளும் கட்சி விரக்தி அடைந்திருப்பதை காட்டும் வகையிலும் எம்சிஎம்சி என்ற மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் வெளியில் வந்து மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம், வெட்கக்கேடான ஹிஷாமுடினின் நிருபர்கள் சந்திப்பு ஆகிய இரண்டு வீடியோக்களையும் அகற்றுமாறு மலேசியாகினியைக் கேட்டுக் கொள்கிறது.

எம்சிஎம்சி ஹிஷாமுக்கு நன்மையைச் செய்யவில்லை.

அதற்கு தேவையே இல்லை. செய்தி என்பது செய்தி தான். பதிவு செய்யப்பட்டது நமது வரலாற்றில் ஒர் அங்கம். 1940 ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் ரஷ்யா வரலாற்றை அகற்ற முயன்றதை போல, அவை அகற்றப்பட வேண்டும் என்று எம்சிஎம்சி கேட்டுக் கொள்வது நியாயமற்றது.

ஹிஷாமுடின் வீடியோ ஏன் அகற்றப்பட வேண்டும்? எனக்கு ஒரே காரணம் தான் என் கண்களுக்குத் தெரிகிறது. அதாவது தர்மசங்கடத்திலிருந்து அவரைக் காப்பாற்றுவதாகும். அந்தக் காரணம் சரியானது என்றால் எம்சிஎம்சி அவருக்கு நன்மையைச் செய்யவில்லை. அவர் பெரிய மனிதரைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அந்த வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட தாம் கூறிய விஷயங்களை அவர் தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அது தான் அவருக்கு சரியான வழி. அவர் அதனை கடந்து செல்ல அனுமதிப்போம். இல்லை என்றால் எதிர்காலத்தில் பிரதமர் ஆவதற்கு அவரை எவ்வாறு பரிசீலிக்க முடியும்?(அதாவது அது நிகழ்வதற்கு மலேசியர்கள் அனுமதித்தால்)

இவை அனைத்தும் இரண்டு மலேசியாக்கள் இருப்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. அதாவது வார்த்தைகள் வேறு, காரியங்கள் வேறு.

தமது ஒரே மலேசியா சுலோகத்தின் வழி மலாய்க்காரர் அல்லாதாரின் மனதைக் கவருவதற்கு முயற்சி செய்யும் பிரதமர் நஜிப்பிற்கு அது நல்லது அல்ல. (நான் ‘சுலோகம்’ என்று கூறுகிறேன். ஏனெனில் அதில் வார்த்தைகள் தாம் நிறைந்திருக்கின்றன. காரியங்கள் குறைவானவை). மாட்டுத் தலை சம்பவம் அவரது முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எதிர்வரும் பாகான் பினாங் இடைத் தேர்தலில் 20 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் ஆவர். அவர்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றனர்?

கடந்த சில மாதங்களாக நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது பாரிசான் நேசனல் தனக்கு நல்ல தோற்றத்தை தரவில்லை. உண்மையில் அந்த விஷயங்கள் தனக்குத் தானே சுட்டுக் கொள்வதைப் போன்று உள்ளது. அதுவும் பக்கத்தான் ராக்யாட் ஏதும் செய்யாமல் இருக்கும் வேளையில்.

பெர்மாத்தாங் பாசிரில் அது நிறுத்திய வேட்பாளரைப் பாருங்கள். அத்துடன் இன்றைய கால கட்டத்தில் நஜிப் ஒன்றை சொல்கிறார். அவரது துணைப் பிரதமர் அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்.

நஜிப் ஒரே மலேசியா கோட்பாட்டை விளம்பரம் செய்கிறார். முஹைடின் யாசின் மலாய் இனத்தைப் பயன்படுத்துகிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை மலாய் இனத் துரோகி என்று வருணிக்கிறார். கோழைகளாக இருக்க வேண்டாம். எழுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் மலாய் நாளேட்டின் கட்டுரையை ஆதரிக்கிறார். ஒரே மலேசியா சின்னமும் பகிரங்கமாக வெளியிடப்பட்ட அதே தினத்தன்று, மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்னோ கடைசி துளி ரத்தம் வரை போராடும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இதனிடையே இனவாதம் முக்கிய மலாய்ப் பத்திரிக்கைகளில் கிட்டத்தட்ட அன்றாடம் முன் வைக்கப்படுகிறது. மிரட்டுவது, அச்சுறுத்துவது, பிளவுபடுத்துவது ஆகிய நோக்கங்களில் அவை இயங்குகின்றன. பெரும்பாலான அந்த ஊடக அமைப்புக்கள் நஜிப்பின் சொந்தக் கட்சிக்கு சொந்தமானவை. அதன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை.

அந்த ஊடக அமைப்புக்கள் தரும் செய்திகளும் நஜிப் வழங்கு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. நாம் யாருக்கு செவி சாய்ப்பது? நாம் யாரைத் தான் நம்புவது?எல்லாவற்றுக்கும் பின்னணியில் சூது ஏதும் இருக்கிறதா? அந்த சூதாட்டத்தில் மக்களாகிய நாம் வெறும் பகடைக் காய்களா? அந்த ஆட்டம் முடிந்ததும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமா?

அது நடக்காது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

————————————————————————————–
sumber : malaysiakini

Tiada ulasan:

Catat Ulasan